யால பருவ நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் கீழ் நெல் சந்தைப்படுத்தல் சபையால் இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இவ்வருட யால பருவ நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் கீழ் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபையால் 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்வனவுச் செயற்பாட்டுடன் சேர்த்து இந்த நெல் தொகை நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) சமன் திலக பண்டார தெரிவித்தார்.

இவற்றுள் அதிகளவான நெல் அறுவடை அம்பாறை மாவட்டத்திலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வட்டாரத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு 3,148 மெற்றிக் தொன்னாகும்.

இது தவிர, அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 567 மெற்றிக் தொன் நெல்லும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 620 மெற்றிக் தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், எதிர்காலத்தில் நெல் அறுவடை செய்யப்படும் அளவுகளுக்கு ஏற்ப நெற்களஞ்சியங்களை திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதும் நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக 148 களஞ்சியசாலைகளைத் திறக்க நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects